கன்னவி றிணிதோட் காளையைக் கண்ட நன்னுத லரிவை நயப்புரைத் தன்று. (இ - ள்.) உலக்கல் பழகிய திண்ணிய தோளையுடைய தலைவனைக் கண்ட நல்ல நுதலினையுடைய மடந்தையினது ஆசைப்பாட்டைச் சொல்லியது எ-று. (வ - று.) கன்னவி றோளானைக் காண்டலுங் கார்க்குவளை அன்னவென் கண்ணுக் கமுதமாம் - என்னை மலைமலிந் தன்ன மார்பம் முலைமலிந் தூழூழ் முயங்குங் காலே (இ - ள்.) மலையையொத்த தோளானைக் கண்டேகக் கருங்குவனை யனைய என் கண்ணிற்கு அமிழ்தமாகா நின்றது; எங்ஙனே இருக்குமோ ! வரை பரந்தாலொத்த அகலத்தை முலை விம்மி முறை முறையாகத் தழுவுமிடத்து எ-று. (2) |