மைவரை நாடனை மடந்தை பின்னரும் கைவளை சோரக் காண்டல் வலித்தன்று (இ - ள்.) மேகத்தைப் பொருந்தின மலைநாடனை மடவாள் இரண்டாவதும் கையில் வளைசோர்கையாலே காணவேண்டுமென்றலை நிச்சயித்தது எ-று. (வ - று.) வேட்டவை யெய்தி விழைவொயிதல் பொய்போலும் மீட்டு மிடைமணிப் பூனானைக் - காட்டென்று 1மாமை பொன்னிறம் பசப்பத் தூமலர் நெடுங்கண் டுயிறுறந் தனவே. (இ - ள்.) விரும்பினவற்றைப் பெற்று ஆசைப்பாடு நீங்குமது பொய்யே போலும்; இரண்டாவதும் செறிந்தமணியாற் சிறந்த ஆபரணத்தினையுடையானைக் காட்டுகவென்று சொல்லி மேனி பொன்னிறம் போலப் பசப்பத் தூமலர்போன்ற நெடிய விழிகள் உறக்கத்தை ஒழிந்தன எ-று. கண், காட்டென்று துயில் துறந்தனவென்க. (6)
1. மாமை பசத்தல் : குறுந். 27 : 4-5. |