ஒட்டொடி மடந்தை யுருகெழு கங்குலிற் கண்டவன் கரப்பக் கனவி னரற்றின்று. (இ - ள்.) ஒள்ளிய வளையினையுடைய தலைவி அஞ்சுதல் பொருந்திய இரவுப்பொழுதிடத்துக் கண்ட தலைவன் ஒளிப்பக் கனவின்கண் வாய்விட்டுப் புலம்பியது எ-று. (வ - று.) அயர்வொடு நின்றே னரும்படர்நோய் தீர நயம்வரும் பள்ளிமே னல்கிக் - கயவா நனவிடைத் தமியேன் வைகக் கனவிடைத் தோன்றிக் கரத்தனீ கொடிதே. (இ - ள்.) மயக்கத்தொடு நின்றேனுடைய அரிய நினைவினால் வந்த நோய் நீங்க நன்மையுண்டாம் சயனத்தின்மேல் எனக்கருளி, கீழ் மகனே, நனவின்கண்ணே தனியேனாகி யான் தங்கக் கனவினிடத்தே தோற்றி நீ மறைந்துபோவது கொடிதாயிருந்தது எ-று. (9) |