304. நெஞ்சொடு மெலிதல்
அஞ்சொல் வஞ்சி யல்லிருட் செலீஇய
நெஞ்சொடு புகன்ற நிலையுரைத் தன்று.

(இ - ள்.) அழகிய சொல்லினையுடைய வஞ்சிக்கொம்பை ஒப்பாள் இரவுப்பொழுது இருளின்கட் செல்வான்வேண்டி மனத்தோடு விரும்பிய நிலையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
மல்லாடு தோளா னளியவாய் மாலிருட்கண்
செல்லா மொழிக செலவென்பாய் - நில்லாய்
புனையிழை யிழந்த பூசல்
நினையினு நினைதியோ வாழியென் னெஞ்சே.

(இ - ள்.) மல்லின் செய்தி யுலாவும் புயத்தினையுடையான்றன் அளியை ஆசைப்பட்டு மயக்கமுடைய இருளிடத்துச் செல்லக்கடவே மல்லேம்; நீ தவிர்வாயாக போக்கை என்று சொல்லுவாய்; நீ நில்லாய்; அணிந்த ஆபரணம் சோர்ந்த ஆரவாரத்தை உள்ளுவையோ? உள்ளாயோ? வாழ்வாயாக, எனது நெஞ்சே எ-று.

(11)