நிற்ற லாற்றா ணெடிதுயிர்த் தலமரும் பொற்றொடி யரிவை பொழுதுகண் டிரங்கின்று (இ - ள்.) உயிர்நிற்றலைப் பொறாளாய் நெட்டுயிர்ப்புக் கொண்டு சுழலும் பொன்னாற்செய்த வளையினையுடைய தலைவி மாலைப்பொழுதைக் கண்டு வருந்தியது எ-று. (வ - று.) இறையே யிறந்தன வெல்வளை யுண்கண் உறையே பொழிதலு மோவா-நிறையைப் பருகாப் பகல்கரந்த பையுள்கூர் மாலை உருகா வுயங்கு முயிர்.
(இ - ள்.) கையிறையைக் கடந்தன, விளக்கத்தினையுடைய தொடிகள்; மையுண்ட விழிகள் துளியைச் சொரிதலும் ஒழியா; என் நிறையை உண்டு ஆதித்தன் ஒளித்த நோய்மிகும் மாலைக்காலத்துக் கரைந்து வருந்தா நிற்கும், பிராணன் எ-று. (9) |