பெய்தா ரகலம் பிரித லாற்றாக் 1கொய்தழை யல்குல் கூட்டத்துக் குழைந்தன்று (இ - ள்.) இட்ட மாலையினையுடைய அகலத்தை நீங்குதல் பொறாத பறித்த தழையாற் சிறந்த அல்குலினையுடையாள் புணர்ச்சியிடத்து நெகிழ்ந்தது எ-று. (வ - று.) மயங்கி மகிழ்பெருக மால்வரை மார்பிற் றயங்கு புனலூரன் றண்டார் -முயங்கியும் பேதை புலம்பப் பிரிதியோ நீயென்னும் கோதைசூழ் கொம்பிற் குழைந்து. (இ - ள்.) மனங்கலங்கிக் களிப்பு மிகப் பெரிய வரைபோன்ற மார்பினையுடைய அசையும் புனலூரன்றன் குளிர்ந்த மாலையைத் தழுவியும் மடவாள் யான் தனிமைப்பட நீ பிரிகின்றாயோவென்று சொல்லும் , மாலை சுற்றின பூங்கொம்புபோலத் தளர்ந்து எ-று. தளர்ந்து நீ பிரிதியோவென்னும். (14)
1. பு.வெ. 291. |