பொற்றா ரகலம் புல்லிய மகளிர்க் கற்றாங் கொழுகா தறங்கண்மா றின்று. (இ - ள்.) அழகிய மாலை மார்பைப் பொருந்திய அரிவையர்க்கு அற்றறுதிப்பட்டு நடவாது அறத்தைக் கண்மறுத்தது எ-று. (வ - று.) 1கரிய பெருந்தடங்கண் வெள்வளைக்கை யாளை மரிய கழிகேண்மை மைந்த - தெரியின் விளிந்தாங் கொழியினும் வட்டகலார் தம்மைத் தெளிந்தாரிற் றீர்வது தீது . (இ - ள்.) கரியவாய் மிகவும் பெரிய விழியினையும் விளர்த்த தொடியணிந்த கரத்தினையுமுடையாளைப் பொருந்திய மிக்க தொடர்ச்சியினையுடைய தலைவனே , ஆராயின் , இறந்துபடினும் விட்டு நீங்காராய்த் தம்மைத் துணையென்று தேறினாரிடத்து நின்றும் கழிவது பொல்லாது எ-று. (17)
1. தொல். அகத். சூ. 54, இளம் . மேற். |