344. வாணிக வென்றி

(வ - று.)
காடுங் கடுந்திரை நீர்ச்சுழியுங் கண்ணஞ்சான்
சாடுங் கலனும் பலவியக்கி - நீடும்
பலிசையாற் பண்டம் பகர்வான் பரியான்
கலிகையா னீக்கல் கடன் .

(இ - ள்.) காட்டையும் கடிய திரையினையுடைய நீர்ச்சுழியையும் கண்ணஞ்சாணய்ச் சகடம் பலவம் இடந்தோறும் செலுத்தி நீடும் இலாபம் காரணமாகப் பலபண்டமும் விற்கும் வாணிகன் பொருளிற் பற்றிலனாய்ப் பிறர்மிடியைத் தன் கையாலே நீக்குமது, செய்தி எ-று.

(2)