346. உழவன் வென்றி

(வ - று.)
மண்பத நோக்கி மலிவயலும் புன்செய்யும்
கண்பட வேர்பூட்டிக் காலத்தால் - எண்பதனும்
தத்துநீ ரார்க்குங் கடல்வேலித் தாயர்போல்
வித்தித் தருவான் விளைவு .

(இ - ள்.) நிலத்தின் செவ்வியைப் பார்த்து மிக்க வயலிடத்தும் கொல்லையிடத்தும் பரக்க ஏரைப்பூட்டி உழுது நற்காலத்தால் நெல்லு வரகு முதலாயின எட்டுணவினையும் தவழுந் திரையொலிக்கும் கடலை வேலியாகவுடைய பூமியிடத்துத் தாயரைப்போல வித்திவிளைப்பான் , பல்லுயிர்க்கும் ஆக்கம் எ-று.

என்பதனாவன :- நெல் வரகு சாமை தினை இறுங்கு கேழ்வரகு கொள் உழுந்து என்பன; "நெல்வரகு சாமை தினையிறுங்கு கேழ்வரகு , கொள்ளுழுந்தோ டெண்விளைவாகும்."

(4)