(வ - று.) இலநா முரைப்பதன்க ணெல்வனை நாணப் பலநாள் பணிபதமுங் கூறிச் - சிலநாளுள் பொங்கரி யுண்கணாள் பூவைக்கு மாறாகப் பைங்கிளியைக் கற்பித்தாள் பாட்டு . (இ - ள்.) நாம் அதனிடத்து இகழ்ந்து சொல்லுஞ் சொல் இல; விளங்கும் வளையினையுடையாய் , நீ நாணப் பலநாளும் தாழ்ந்த சொற்களையுங்கூறிச் சில நாளுள்ளே மிக்க செவ்வரியினையுடைய மையுண்ட கண்ணாள் நம் பூவைக்கு மாறுபடத் தன் பசுங்கிளியைப் பாட்டைக் கற்பித்தாள் எ-று. நாமுரைப்பு இல . (11) |