மைந்துடை யாடவர் செய்தொழில் கூறலும் அந்தமில் புலவ ரதுவென மொழிப. (இ - ள்.) வலியினையுடைய வீரர் செய்யுந் தொழிலைச் சொல்லுதலும் முடிவில்லாத அறிவினையுடையோர் அத்துறையென்று சொல்லுவர் எ-று. (வ - று.) தமருட் டலையாத றார்தாங்கி நிற்றல் எமருள்யா மின்னமென் றெண்ணல்-அமரின் முடுகழலின் முந்துறுதன் .1முல்லைத்தார் வேந்தன் தொடுகழன் மைந்தர் தொழில். (இ - ள்.) தம்முடைய சுற்றத்தாரின் மேலாகுதல், தூசிப்படையைத் தடுத்து நிற்றல், எங்கள் படைவீரருள் யாம் இன்னதன்னமையேமென்றெண்ணுதல்,போரிடத்து விரைந்து செல்லும் நெருப்புப்போல முற்படப் புகுதல், முல்லைத்தாரினையுடைய மன்னனுடைய கட்டும் வீரக்கழலினையுடைய வீரர் செய்தி எ - று. முல்லைத்தார் கூறியது, 2"வஞ்சி தானே முல்லையது புறனே" என்றதனால். (6)
1. சீவக.547. 2. தொல்.புறத்.சூ.6. |