51. கொடை வஞ்சி
நீடவுங் குறுகவு நிவப்பவுந் தூக்கிப்
பாடிய புலவர்க்குப் பரிசினீட் டின்று.

(இ - ள்.) உச்சமாகவும் மந்தமாகவும் அதன்மேற் சமமாகவும் இசையையளந்து பாடின அறிஞர்க்குப் பரிசிலைக்கொடுத்தது எ-று.

செந்தூக்கு முதலான எழுவகைத் தூக்கினாலும் தூக்கியென்றுமாம்.ஈண்டு நிவப்பவென்றது மந்தத்திலே ஓங்கியசமத்தை; 1"ஒரு சீர் செந்தூக் கிருசீர் மதலை, முச்சீர் துணிபு நாற்சீர் கோயில், ஐஞ்சீர் நிவப்பே யறுசீர் கழாஅல், எழுசீர் தானெடுந் தூக்கென மொழிப" என்றராகலின்.

(வ - று.)
சுற்றிய சுற்ற முடன்மயங்கித் தம்வயி
றெற்றி மடவா ரிரிந்தோட-முற்றிக்
2குரிசி லடையாரைக் கொண்டகூட் டெல்லாம்
பரிசின் முகந்தன பாண்.

(இ - ள்.) சூழ்ந்த பெருங்கிளை ஒக்கக் கலங்கிக் தத்தம் வயிற்றிலே அடித்துக்கொண்டு மகளிர் கெட்டோடப் பகைவர் நாட்டை வளைத்துத் தலைவன் சத்துருக்களைப் பறித்துக்கொண்ட பொருண்முழுதும் தாம் பெறும் பேறாக முகந்துகொண்டன பாண்கிளை எ-று.

(16)

1. சிலப்.3:16;14:150, அடியார். மேற். 2. சிறுபாண். 247-8: மதுரைக். 145-6; மலைபடு. 71-2; பதிற். 2-ஆம்பத். பதி;44;