52. குறுவஞ்சி
மடுத்தெழுந்த மறவேந்தர்க்குக்
கொடுத்தளித்துக் குடியோம்பின்று.

(இ - ள்.) மண்டி எதிர்ந்த வீரத்தையுடைய மன்னர்க்குத் திறையைக் கொடுத்து நாடுடைய அரசன் குடிக்குத் தண்ணளிபண்ணிக் காத்தது எ-று.

(வ - று.)
தாட்டாழ் தடக்கைத் தனிமதி வெண்குடையான்
வாட்டானை வெள்ளம் வரவஞ்சி-மீட்டான்
மலையா மறமன்னன் மால்வரையே போலும்
கொலையானை பாய்மாக் கொடுத்து.

(இ - ள்.) தாளிலே தாழநீண்ட பெரியகையினையும் ஒப்பில்லாத மதியினையொத்த கொற்றக்குடையினையுமுடையான் வாளினையுடைய சேனைவெள்ளம் தங்கள் நாட்டில் வருதற்கு அஞ்சி விலக்கினான்;எதிர்க்கமாட்டாத மாற்சரியத்தினையுடைய வேந்தன் பெரியமலையினை யொக்கும் கொலையானையினையும் சதிபாயும் குதிரையினையும் கொடுத்து எ-று.

கொடுத்து மீட்டானென்க.

(17)