வெஞ்சின வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப வஞ்சினங் கூறிய வகைமொழிந் தன்று . (இ - ள்.) வெய்ய கோபத்தையுடைய மன்னவன் பகைவரைத் தாழப் பண்ணுவான் வேண்டி இவ்வாறு செய்வேனெனச் சொல்லிய கூறுபாட்டைச் சொல்லியது எ-று. (வ - று.) இன்று பகலோ னிறவாமு னொன்னாரை வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின் - என்றும் அரணவியப் பாயு மடையார்மு னிற்பேன் முரணவிய முன்முன் மொழிந்து . (இ - ள்.) இற்றைநாள் ஆதித்தன் படுவதன்முன் பகைவரை வெற்றியைச்செய்து போர்க்களத்தைக்கொள்ளாத வேலை எடுப்பேனாயின் எந்நாளும் யானிருந்த அரண்கெடத் தாக்கும் பகைவர்முன்னே நிற்பேனாவேன் மாறுபாடுகெட முன்னே முன்னே தாழவார்த்தைகளைச் சொல்லி எ-று. (9)
1. தொல். புறத். சூ. 24. |