70. 1பூக்கோணிலை
காரெதிரிய 2கடற்றானை
போரெதிரிய பூக்கொண்டன்று .

(இ - ள்.) மேகம் பொருந்திய கடல்போல ஒலிக்குஞ்சேனை பூசலை ஏற்றுக்கொள்வான்வேண்டி அரசன் கொடுத்த பூவினைக்கொண்டது எ-று.

(வ - று.)
பருதிசெல் வானம் பரந்துருகி யன்ன
குருதியா றாவதுகொல் குன்றூர் - கருதி
மறத்திறத்தின் மாறா மறவருங் கொண்டார்
புறத்திறுத்த வேந்திரியப் பூ .

(இ - ள்.) ஆதித்தன் படும் அந்திவானம் உருகிப்பரந்தாலொத்த உதிரநதி ஆவதுபோலும் , மலைசூழ்ந்த ஊர்; நினைந்து சினக் கூற்றில் தப்பாத கொடுவினையாளரும் கைக்கொண்டார் , தங்களூர்ப்புறத்தே விட்ட வஞ்சி மன்னன்கெடப் பூவினை எ-று.

உம்மை : சிறப்பும்மை .

(10)

1. புறநா. 289 : 9, 341 : 9 .
2. கடற்றானையான்