72. தலைமாராயம்
தலைகொடுவந்தா னுண்மலியச்
சிலையுடைவேந்தன் சிறப்பீந்தன்று .

(இ - ள்.) தலையைக் கொடுவந்தான் மனமுவப்ப வில்லினையுடைய மன்னன் செல்வத்தைக் கொடுத்தது எ-று.

(வ - று.)
உவன்றலை யென்னு முறழ்வின்றி யொன்னார்
இவன்றலையென் றேத்த வியலும் - அவன்றலை
தந்தாற்கு நல்கல் வியப்போ 1கிளந்தேத்தி
வந்தார்க் குவந்தீயும் வாழ்வு .

(இ - ள்.) உவன் இவனுக்கு நேரென்று சொல்லும் ஒப்பின்றிப் பகைவர் எல்லாரிலும் இவன் தலையானவனென்று சொல்லி வாழ்த்த நடக்கும் அவனுடைய தலையைக் கொடுவந்தவற்குச் செல்வங் கொடுத்தல் அதிசயமோ, மிகப் புகழ்ந்துவந்தார்க்கு மகிழ்ந்துகொடுக்குஞ் செல்வம் ! எ-று.

(12)

1. கிளர்ந்தேத்தி.