82. ஆஞ்சிக் காஞ்சி
காதற் கணவனொடு கனையெரி மூழ்கும்
மாதர்மெல் லியலின் மலிபுரைத் தன்று.

(இ - ள்.) அன்பினையுடைய தன்கொழுநனோடு செறிந்த நெருப்பிலே அழுந்தும் காதலையுடைய மெத்தென்ற தன்மையாற் சிறந்தவள் தன் மிகுதியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
தாங்கிய கேளொடு தானு 1மெரிபுகப்
பூங்குழை யாயம் புலர்கென்னும் - நீங்கா
விலாழிப் பரித்தானை வெந்திறலார் சீறூர்ப்
புலாழித் தலைக்கொண்ட புண்.

(இ - ள்.) தரித்தகணவனோடு தானும் நெருப்பிலேபுகுவான் வேண்டிப் பொலிந்த மகரக்குழையையுடையவள் தோழிமாரை அகலப்போமினென்று சொல்லும்; ஒழியாத வாய்நுரையினையுடைய குதிரையாற் சிறந்த சேனைப் பகைவர் சீறூரிடத்துப் புலானாற்றத்தினையுடைய சக்கரத்தாலே எறியப்பட்டபுண்ணை எ-று.

புண்ணைத்தாங்கிய கேளொடு எனக்கூட்டுக. புலவென்பதனுள் அகரம் தொக்கது; ஒற்று இரட்டாமையுமறிக.

(22)

1. மெரிபுகீஇப்