ஏமாண்ட நெடும்புரிசை வாமானது 1வகையுரைத்தன்று. (இ - ள்.) எய்யுந் தொழில் மாட்சிமைப்பட்ட பெரிய மதிலிடத்துப்பாயும் குதிரையது பகுதியைச் சொல்லியது எ-று. (வ - று.) 2தாங்கன்மின் றாங்கன்மின் றானை விறன்மறவிர் ஓங்கன் மதிலு ளொருதனிமா-ஞாங்கர் 3மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றார் உயிருணிய வோடி வரும். (இ - ள்.) தடுத்தற்கரிது! தடுத்தற்கரிது!! தடாதேகொண்மின்! தடாதேகொண்மின்!! சேனையிடத்து வென்றிவீரர்காள் ,மலைபோன்ற புரிசையிடத்து ஒப்பில்லாததொரு குதிரை பக்கத்தே கவரியிட எழுந்து மேகத்தையொத்துப் பகைவருயிரை உண்பான்வேண்டிக் கடுகிவரும் எ-று. (5)
1. நிலையுரைத்தன்று 2. புறநா. 299, 303 - 4. 3. மதுரைக். 391. |