பக்கம் எண் :

5. நொச்சிப்படலம்

(இ - ள்.) சினச்சேனையையுடைய சினமன்னர் வீரசுவர்க்கத்திடத் துப்போன போக்கைச் சொல்லியது எ - று.

(வ - று.)1பாயினார் மாயும் வகையாற் பலகாப்பும்
ஏயினா ரேய விகன்மறவர் - ஆயினார்
ஒன்றி யவரற வூர்ப்புலத்துத் தார்தாங்கி
வென்றி யமரர் விருந்து.

(இ - ள்.) அரணைச் சூழப் பரந்தார் படுமுறையாற் பலகாவலையும் ஏவினார்; ஏவின மாறுபாட்டையுடைய வீரர் ஆயினார், எதிரதாகக் கிட்டினவர் கெட ஊரிடத்துத் தூசிப்படையைத் தடுத்து வெற்றியினை யுடைய தேவர்கட்கு விருந்து எ - று.

விருந்து ஆயினாரென்க .

(2)

88. ஊர்ச்செரு

அருமிளையொடு கிடங்கழியாமைச்
செருமலைந்த சிறப்புரைத்தன்று.

(இ - ள்.) பகைவராற் புகுதற்கரிய காவற்காட்டோடு அகழி சிதையாதபடி பூசல்செய்த மதிப்பினைச் சொல்லியது எ - று.

(வ - று.)வளையும் வயிரு மொலிப்பவாள் வீசி
இளையுங் கிடங்குஞ் சிதையத் - தளைபரிந்த
நோனார் படையிரிய நொச்சி விறன்மறவர்
ஆனா ரமர்விலக்கி யார்ப்பு.

(இ - ள்.) சங்கும் கொம்பும் முழங்க வாளையோச்சிக் காவற்காடும் அகழுமழியக் காவற்பிணியை யறுத்த பகைவரான உழிஞையார் சேனைகெட நொச்சியிடத்து வெற்றிவீரர் ஆனார், போரைவிலக்கி ஆரவாரிப்பு எ - று.

ஆரவாரிப்பு ஆனாரென்க .

(3)

89. செருவடை வீழ்தல்

ஆழ்ந்துபடு கிடங்கோ டருமிளை காத்து
வீழ்ந்த வேலோர் விறன்மிகுத் தன்று.

இ - ள். ஆழமுடைத்தான கிடங்கினோடு அரிய காவற்காட்டைக் காத்துப் பட்ட வேல்வீரர் வெற்றியைச் சொல்லியது. எ - று

வ - று. ஈண்டரில் சூழ்ந்த விளையு மெரிமலர்க்
காண்டகு நீள்கிடங்குங் காப்பாராய்-வேண்டார்
மடங்க லனைய மறவேலோர் தத்தம்
உடம்பொடு காவ லுயிர்.


1. 'தொல'்.புறத்.சூ. 11, இளம். மேற். 2. பு.வெ.130