|  | நடை ஊறு சொல் மடந்தை நல்குவதும் நம்மேல் இடையூறு நீங்குவதும் எல்லாம் - புடை ஊறும்
 சேனைமுகத் தாள் இரியச் சீறு முகத்து ஊறு மதத்து
 ஆனை முகத்தானை நினைத்தால்.
 
 கண் அவனைக் காண்க, இரு காது அவனைக் கேட்க, வாய்ப்
 பண் அவனைப் பாட, பதம் சூழ்க, - எள் நிறைந்த
 நெய் ஒத்து நின்றானை நீல மிடற்றானை என்
 கை ஒத்து நேர் கூப்புக.
 |