|  | மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத், தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
 தன்பால் தண் தமிழ் தா இன்று உணர்ந்த
 துன்ன அருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல்
 பன்னிரு புலவரும், பாங்கு உறப் பகர்ந்த,
 பன்னிரு படலமும் பழிப்பு இன்று உணர்ந்தோன்;
 ஒங்கிய சிறப்பின் உலகம் முழுது ஆண்ட
 வாங்குவில் தடக்கை வானவர் மருமான்,
 ஐயனாரிதன் அகல் இடத்தவர்க்கு,
 மை அறு புறப்பொருள் வழாலின்று விளங்க,
 வெண்பா மாலை எனப் பெயர் நிறீஇப்,
 பண்புஉற மொழிந்தனன், பான்மையில் தெரிந்தே.
 |