| தொடக்கம் | 
		
				| கரந்தைப் படலம் 
 | 
		
				|  | 
					
			
			|  | |  | 2. கரந்தைப் படலம் |  |  | கதம் மலி கரந்தை , கரந்தை அரவம், அதரிடைச் செலவே, அரும் போர் மலைதல்,
 புண்ணொடு வருதல், போர்க்களத்து ஒழிதல்,
 ஆள்எறி பிள்ளை , பிள்ளைத் தெளிவே,
 பிள்ளை ஆட்டொடு , கையறு நிலையே,
 நெடுமொழி கூறல் , பிள்ளைப் பெயர்ச்சி,
 வேத்தியல் மலிபே , மிகு குடி நிலை, என
 அருங்கலை உணர்ந்தோர் , அவை பதினான்கும்
 கரந்தையும் கரந்தைத் துறையும் என்ப.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கரந்தை |  | 22. | மலைத்து எழுந்தோர் மறம் சாயத் தலைக் கொண்ட நிரை பெயர்த்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கரந்தை அரவம் |  | 23. | நிரைகோள் கேட்டுச் செய் தொழில் ஒழிய. விரைவனர் குழூஉம் வகை உரைத்தன்று
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | அதரிடைச் செலவு |  | 24. | ஆற்றார் ஒழியக் கூற்று எனச் சினைஇப் போற்றார் போகிய நெறியிடை ஏகின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | போர் மலைதல் |  | 25. | வெட்சியாரைக் கண்ணுற்று வளைஇ உட்குவரத் தாக்கி உறழ் செருப் புரிந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | புண்ணொடு வருதல் |  | 26. | மண்ணோடு புகழ் நிறீஇப், புண்ணோடு தான் வந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | போர்க்களத்து ஒழிதல் |  | 27. | படைக்கு ஓடா விறல் மறவரைக் கடைக்கொண்டு, களத்து ஒழிந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | ஆள்எறி பிள்ளை |  | 28. | வருவாரை எதிர்விலக்கி, ஒரு தான் ஆகி ஆள் எறிந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பிள்ளைத் தெளிவு |  | 29. | கண் மகிழ்ந்து துடிவிம்மப் புண் மகிழ்ந்து புகன்று ஆடின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பிள்ளை ஆட்டு |  | 30. | கூடலர் குடர் மாலை சூட்டி, வேல் திரித்து விரும்பி ஆடின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கையறுநிலை |  | 31. | வெருவரும் வாள் அமர் விளிந்தோன் கண்டு கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | நெடுமொழி கூறல் |  | 32. | மன் மேம்பட்ட மதிக் குடையோற்குத் தன் மேம்பாடு தான் எடுத்து உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பிள்ளைப் பெயர்ச்சி |  | 33. | போர் தாங்கிப் புள் விலங்கியோனைத் தார்வேந்தன் தலையளித்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வேத்தியல் மலிபு |  | 34. | தோள் வலிய வய வேந்தனை, வாள் வலி மறவர் சிறப்பு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | குடி நிலை |  | 35. | மண் திணி ஞாலத்துத் தொன்மையும் , மறனும், கொண்டு பிறர் அறியும் குடி வரவு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  |