| தொடக்கம் | 
		
				| வஞ்சிப் படலம் 
 | 
		
				|  | 
					
			
			|  | |  | 3. வஞ்சிப் படலம் |  |  | வாடா வஞ்சி , வஞ்சி அரவம், கூடார்ப் பிணிக்கும் குடை நிலை , வாள் நிலை,
 கொற்றவை நிலையே, கொற்ற வஞ்சி,
 குற்றம் இல் சிறப்பின் கொற்ற வள்ளை,
 பேர் ஆண் வஞ்சி , மாராய வஞ்சி,
 நெடுமொழி வஞ்சி, முதுமொழி வஞ்சி,
 உழபுல வஞ்சி , மழபுல வஞ்சி,
 கொடையின் வஞ்சி, குறுவஞ்சிய்யே,
 ஒருதனி நிலையொடு , தழிஞ்சி , பாசறை,
 பெருவஞ்சிய்யே , பெருஞ்சோற்று நிலையொடு,
 நல்லிசை வஞ்சி என நாட்டினர் தொகுத்த
 எஞ்சாச் சீர்த்தி இருபத்தொன்றும்
 வஞ்சியும் , வஞ்சித் துறையும் , ஆகும்.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வஞ்சி |  | 36. | வாடா வஞ்சி தலை மலைந்து, கூடார் மண் கொளல் குறித்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வஞ்சி அரவம் |  | 37. | வள் வார் முரசமொடு வயக் களிறு முழங்க ஒள் வாள் தானை உருத்து எழுந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | குடை நிலை |  | 38. | பெய் தாமம் சுரும்பு இமிரப் பெரும் புலவர் புகழ் பாடக் கொய் தார் மன்னவன் குடை நாள் கொண்டன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வாள் நிலை |  | 39. | செற்றார் மேல் செலவு அமர்ந்து, கொற்ற வாள் நாள் கொண்டன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கொற்றவை நிலை |  | 40. | நீள் தோளான் வென்றி கொள்க என நிறை மண்டை வலன் உயரிக் கூடாரைப் புறம் காணும் கொற்றவை நிலை உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  |  |  | 41. | மைந்து உடை ஆடவர் செய் தொழில் கூறலும், அந்தம் இல் புலவர் அது என மொழிப.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கொற்ற வஞ்சி |  | 42. | வையகம் வணங்க வாள் ஓச்சினன் எனச் செய் கழல் வேந்தன் சீர் மிகுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கொற்ற வள்ளை |  | 43. | மன்னவன் புகழ் கிளந்து, ஒன்னார் நாடு அழிபு இரங்கின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பேராண் வஞ்சி |  | 44. | கேள் அல்லார் முனை கெடுத்த, மீளியார்க்கு மிக உய்த்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  |  |  | 45. | அருந்திறை அளப்ப ஆறிய சினத்தொடு பெரும் பூண் மன்னவன் பெயர்தலும் அதுவே.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | மாராய வஞ்சி |  | 46. | மற வேந்தனில் சிறப்பு எய்திய விறல் வேலோர் நிலை உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | நெடுமொழி வஞ்சி |  | 47. | ஒன்னாதார் படை கெழுமித் தன் ஆண்மை எடுத்து உரைத்தன்று
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | முதுமொழி வஞ்சி |  | 48. | தொல் மரபின் வாள் குடியின் முன்னோனது நிலை கிளந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | உழபுலவஞ்சி |  | 49. | நேராதார் வள நாட்டைக் கூர் எரி கொளீஇயன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | மழபுல வஞ்சி |  | 50. | கூடார் முனை கொள்ளை சாற்றி வீடு அறக் கவர்ந்த வினை மொழிந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கொடை வஞ்சி |  | 51. | நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கிப் பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | குறு வஞ்சி |  | 52. | மடுத்து எழுந்த மற வேந்தர்க்குக் கொடுத்து அளித்துக் குடி ஓம்பின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இதுவுமது |  | 53. | கட்டூரது வகை கூறினும் அத் துறைக்கு உரித்தாகும்.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | ஒரு தனி நிலை |  | 54. | பொரு படையுள் கல்சிறை போல், ஒருவன் தாங்கிய நிலை உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | தழிஞ்சி |  | 55. | அழிகுநர் புறக்கொடை அயில் வாள் ஒச்சாக் கழி தறுகண்மை காதலித்து உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பாசறை நிலை |  | 56. | மதிக்குடைக் கீழ் வழி மொழிந்து மன்னர் எல்லாம் மறம் துறப்பவும் பதிப்பெயரான் மற வேந்தன் பாசறை இருந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பெரு வஞ்சி |  | 57. | முன் அடையார் வள நாட்டைப் பின்னர் உடன்று எரி கொளீஇயன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பெருஞ் சோற்று நிலை |  | 58. | திருந்தார் தெம்முனை தெறுகுவர் இவர் எனப், பெருஞ்சோறு ஆடவர் பெறும்முறை வகுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | நல் இசை வஞ்சி |  | 59. | ஒன்னாதார் முனை கெட இறுத்த வென்வேல் ஆடவன் விறல் மிகுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இதுவுமது |  | 60. | இறுத்தபின் அழிபு இரங்கல் இறுத்து உரைப்பினும் அத்துறை ஆகும்.
 | 
 | உரை | 
		
			|  |  |  |