தொடக்கம் |
தும்பைப் படலம்
|
|
|
| 7. தும்பைப் படலம் | | துன்ன அருங் கடும் போர்த் தும்பை, தும்பை அரவம். தன் நிகர் இல்லாத் தானை மறமே, யானை மறத்தொடு , குதிரை மறமே, தார்நிலை , தேர் மறம் , பாணது பாட்டே, இருவரும் தபுநிலை , எருமை மறமே. ஏம எருமை, நூழில் என்றா, நூழில் ஆட்டே , முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை, பேய்க் குரவையே, களிற்று உடனிலையே, ஒள்வாள் அமலை, தானை நிலையே , வெருவரு நிலையே, சிருங்கார நிலையே , உவகைக் கலுழ்ச்சி, தன்னை வேட்டல் , தொகைநிலை , உளப்பட நல் பொருள் தெரிந்தோர் நால் இரு - மூன்றும் வண் பூந் தும்பை வகை என மொழிப. |
|
உரை
|
|
|
|
|
| தும்பை | 127. | செங்களத்து மறம் கருதிப் பைந்தும்பை தலை மலைந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| தும்பை அரவம் | 128. | பொன் புனைந்த கழல் அடியோன் தன் படையைத் தலையளித்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| தானை மறம் | 129. | தாம் படைத்தலைக் கொள்ளாமை ஓம்படுத்த உயர்பு கூறின்று. |
|
உரை
|
|
|
|
|
| இதுவுமது | 130. | பூம்பொழிற் புறம் காவலனை ஒம்படுத்தற்கும் உரித்து என மொழிப. |
|
உரை
|
|
|
|
|
| இதுவுமது | 131. | வேல் தானை மறம் கூறி மாற்றாரது அழிபு இரங்கினும் ஆற்றின் உணரின் அத்துறை ஆகும். |
|
உரை
|
|
|
|
|
| யானை மறம் | 132. | எழும் அரவக் கடல் தானையான், மழகளிற்றின் மறம் கிளந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| குதிரை மறம் | 133. | எறி படையான் இகல் அமருள் செறி படை மான் திறம் கிளந்தன்று |
|
உரை
|
|
|
|
|
| தார் நிலை | 134. | முன் எழு தரு படை தாங்குவன் என், மன்னவற்கு மறம் கிளந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| | 135. | ஒரு குடை மன்னனைப் பல குடை நெருங்கச் செருவிடைத் தமியன் தாங்கற்கும் உரித்தே. |
|
உரை
|
|
|
|
|
| தேர் மறம் | 136. | முறி மலர்த்தார் வய வேந்தன் செறி மணித்தேர்ச் சிறப்பு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பாண்பாட்டு | 137. | வெண் கோட்ட களிறு எறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக் கைவல் யாழ்ப்பாணர் கடன் இறுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| இருவரும் தபு நிலை | 138. | பொரு படை களத்து அவிய இரு வேந்தரும் இகல் அவிந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| எருமை மறம் | 139. | வெயர் பொடிப்பச் சினம் கடைஇப் பெயர் படைக்குப் பின் நின்றன்று. |
|
உரை
|
|
|
|
|
| ஏம எருமை | 140. | குடை மயங்கிய வாள் அமருள், படை மயங்கப் பாழி கொண்டன்று. |
|
உரை
|
|
|
|
|
| நூழில் | 141. | கழல் வேந்தர் படை விலங்கி அழல் வேல் திரித்து ஆட்டு அமர்ந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| நூழில் ஆட்டு | 142. | களம் கழுமிய படை இரிய, உளம் கிழித்த வேல் பறித்து ஒச்சின்று. |
|
உரை
|
|
|
|
|
| முன் தேர்க் குரவை | 143. | எழு உறழ் திணி தோள் வேந்தன் , வெல் தேர் முழு வலி வயவர் முன் ஆடின்று. |
|
உரை
|
|
|
|
|
| பின் தேர்க் குரவை | 144. | கருங்கழல் மறவரொடு வெள்வளை விறலியர், பெருந்தகை தேரின் பின் ஆடின்று. |
|
உரை
|
|
|
|
|
| பேய்க் குரவை | 145. | மன்னன் ஊரும் மறம் மிகு மணித்தேர்ப் பின்னும் , முன்னும் , பேய் ஆடின்று. |
|
உரை
|
|
|
|
|
| களிற்றுடனிலை | 146. | ஒளிற்று எஃகம் பட வீழ்ந்த களிற்றின் கீழ்க் கண்படுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| ஒள்வாள் அமலை | 147. | வலி கெழு தோள் வாள் வயவர், ஒலி கழலான் உடன் ஆடின்று. |
|
உரை
|
|
|
|
|
| தானை நிலை | 148. | இரு படையும் மறம் பழிச்சப் பொரு களத்துப் பொலிவு எய்தின்று. |
|
உரை
|
|
|
|
|
| வெருவு அரு நிலை | 149. | விலங்கு அமருள் வியல் அகலம் வில் உதைத்த கணை கிழிப்ப, நிலம் தீண்டா வகைப் பொலிந்த நெடுந்தகை நிலை உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| சிருங்கார நிலை | 150. | பகை புகழக் கிடந்தானை முகை முறுவலார் முயக்கு அமர்ந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| உவகைக் கலுழ்ச்சி | 151. | வாள் வாய்த்த வடு ஆழ் யாக்கைக் கேள் கண்டு கலுழ்ந்து உவந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| தன்னை வேட்டல் | 152. | தம் இறைவன் விசும்பு அடைந்தென வெம் முரணான் உயிர் வேட்டன்று.
|
|
உரை
|
|
|
|
|
| இதுவுமது | 153. | காய் கதிர் நெடு வேல் கணவனைக் காணிய ஆயிழை சேறலும் அத்துறை ஆகும். |
|
உரை
|
|
|
|
|
| தொகைநிலை | 154. | அழிவு இன்று புகழ் நிறீஇ ஒழிவு இன்று களத்து ஒழிந்தன்று. |
|
உரை
|
|
|
|