தும்பைப் படலம்
 
7. தும்பைப் படலம்
துன்ன அருங் கடும் போர்த் தும்பை, தும்பை அரவம்.
தன் நிகர் இல்லாத் தானை மறமே,
யானை மறத்தொடு , குதிரை மறமே,
தார்நிலை , தேர் மறம் , பாணது பாட்டே,
இருவரும் தபுநிலை , எருமை மறமே.
ஏம எருமை, நூழில் என்றா,
நூழில் ஆட்டே , முன்தேர்க் குரவை,
பின்தேர்க் குரவை, பேய்க் குரவையே,
களிற்று உடனிலையே, ஒள்வாள் அமலை,
தானை நிலையே , வெருவரு நிலையே,
சிருங்கார நிலையே , உவகைக் கலுழ்ச்சி,
தன்னை வேட்டல் , தொகைநிலை , உளப்பட
நல் பொருள் தெரிந்தோர் நால் இரு - மூன்றும்
வண் பூந் தும்பை வகை என மொழிப.
உரை
   
தும்பை
127. செங்களத்து மறம் கருதிப்
பைந்தும்பை தலை மலைந்தன்று.
உரை
   
தும்பை அரவம்
128. பொன் புனைந்த கழல் அடியோன்
தன் படையைத் தலையளித்தன்று.
உரை
   
தானை மறம்
129. தாம் படைத்தலைக் கொள்ளாமை
ஓம்படுத்த உயர்பு கூறின்று.
உரை
   
இதுவுமது
130. பூம்பொழிற் புறம் காவலனை
ஒம்படுத்தற்கும் உரித்து என மொழிப.
உரை
   
இதுவுமது
131. வேல் தானை மறம் கூறி மாற்றாரது அழிபு இரங்கினும்
ஆற்றின் உணரின் அத்துறை ஆகும்.
உரை
   
யானை மறம்
132. எழும் அரவக் கடல் தானையான்,
மழகளிற்றின் மறம் கிளந்தன்று.
உரை
   
குதிரை மறம்
133. எறி படையான் இகல் அமருள்
செறி படை மான் திறம் கிளந்தன்று
உரை
   
தார் நிலை
134. முன் எழு தரு படை தாங்குவன் என்,
மன்னவற்கு மறம் கிளந்தன்று.
உரை
   
135. ஒரு குடை மன்னனைப் பல குடை நெருங்கச்
செருவிடைத் தமியன் தாங்கற்கும் உரித்தே.
உரை
   
தேர் மறம்
136. முறி மலர்த்தார் வய வேந்தன்
செறி மணித்தேர்ச் சிறப்பு உரைத்தன்று.
உரை
   
பாண்பாட்டு
137. வெண் கோட்ட களிறு எறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக்
கைவல் யாழ்ப்பாணர் கடன் இறுத்தன்று.
உரை
   
இருவரும் தபு நிலை
138. பொரு படை களத்து அவிய
இரு வேந்தரும் இகல் அவிந்தன்று.
உரை
   
எருமை மறம்
139. வெயர் பொடிப்பச் சினம் கடைஇப்
பெயர் படைக்குப் பின் நின்றன்று.
உரை
   
ஏம எருமை
140. குடை மயங்கிய வாள் அமருள்,
படை மயங்கப் பாழி கொண்டன்று.
உரை
   
நூழில்
141. கழல் வேந்தர் படை விலங்கி
அழல் வேல் திரித்து ஆட்டு அமர்ந்தன்று.
உரை
   
நூழில் ஆட்டு
142. களம் கழுமிய படை இரிய,
உளம் கிழித்த வேல் பறித்து ஒச்சின்று.
உரை
   
முன் தேர்க் குரவை
143. எழு உறழ் திணி தோள் வேந்தன் , வெல் தேர்
முழு வலி வயவர் முன் ஆடின்று.
உரை
   
பின் தேர்க் குரவை
144. கருங்கழல் மறவரொடு வெள்வளை விறலியர்,
பெருந்தகை தேரின் பின் ஆடின்று.
உரை
   
பேய்க் குரவை
145. மன்னன் ஊரும் மறம் மிகு மணித்தேர்ப்
பின்னும் , முன்னும் , பேய் ஆடின்று.
உரை
   
களிற்றுடனிலை
146. ஒளிற்று எஃகம் பட வீழ்ந்த
களிற்றின் கீழ்க் கண்படுத்தன்று.
உரை
   
ஒள்வாள் அமலை
147. வலி கெழு தோள் வாள் வயவர்,
ஒலி கழலான் உடன் ஆடின்று.
உரை
   
தானை நிலை
148. இரு படையும் மறம் பழிச்சப்
பொரு களத்துப் பொலிவு எய்தின்று.
உரை
   
வெருவு அரு நிலை
149. விலங்கு அமருள் வியல் அகலம் வில் உதைத்த கணை கிழிப்ப,
நிலம் தீண்டா வகைப் பொலிந்த நெடுந்தகை நிலை உரைத்தன்று.
உரை
   
சிருங்கார நிலை
150. பகை புகழக் கிடந்தானை
முகை முறுவலார் முயக்கு அமர்ந்தன்று.
உரை
   
உவகைக் கலுழ்ச்சி
151. வாள் வாய்த்த வடு ஆழ் யாக்கைக்
கேள் கண்டு கலுழ்ந்து உவந்தன்று.
உரை
   
தன்னை வேட்டல்
152. தம் இறைவன் விசும்பு அடைந்தென
வெம் முரணான் உயிர் வேட்டன்று.
உரை
   
இதுவுமது
153. காய் கதிர் நெடு வேல் கணவனைக் காணிய
ஆயிழை சேறலும் அத்துறை ஆகும்.
உரை
   
தொகைநிலை
154. அழிவு இன்று புகழ் நிறீஇ
ஒழிவு இன்று களத்து ஒழிந்தன்று.
உரை