| தொடக்கம் | 
		
				| சிறப்பின் பொது இயல் 
 | 
		
				|  | 
					
			
			|  | |  | சிறப்பின் பொது இயல் |  |  | முதுபாலையே, சுரநடை,ஏனைத் தபுதார நிலையே, தாபத நிலையே,
 தலைப்பெயல் நிலையே, பூசல் மயக்கே,
 மாலை நிலையே , மூதானந்தம்,
 ஆனந்தம்மே, ஆனந்தப் பையுள்,
 கையறு நிலை , உளப்படப் பதினொன்றும்,
 மையறு சிறப்பின் பொது இயல் பால.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | முதுபாலை |  | 254. | காம்பு உயர் கடத்திடைக் கணவனை இழந்த பூங்கொடி மடந்தை புலம்பு உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | சுரநடை |  | 255. | மூது அரில் நிவந்த முதுகழை ஆரிடைக் காதலி இழந்த கணவன் நிலை உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | தபுதார நிலை |  | 256. | புனையிழை இழந்தபின் புலம்பொடு வைகி மனையகத்து உறையும் மைந்தன் நிலை உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | தாபத நிலை |  | 257. | குருந்து அலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக் கருந்தடங் கண்ணி கைம்மை கூறின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | தலைப் பெயல் நிலை |  | 258. | இன் கதிர் முறுவல் பாலகன் என்னும் தன் கடன் இறுத்த தாய் தபுநிலை உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பூசல் மயக்கு |  | 259. | பல் இதழ் மழைக்கண் பாலகன் மாய்ந்தெனப் புல்லிய பெருங்கிளைப் பூசல் கூறின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  |  |  | 260. | வேந்தன் மாய்ந்தென வியலிடம் புலம்பினும் ஆய்ந்த புலவர் அது என மொழிப.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | மாலை நிலை |  | 261. | கதிர்வேல் கணவனொடு கனை எரி முழுக மதி ஏர் நுதலி மாலை நின்றன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | மூதானந்தம் |  | 262. | கயல் ஏர் கண்ணி கணவனொடு முடிய, வியல் நெறிச் செல்வோர் வியந்து உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  |  |  | 263. | கொடியான் கூர்ங் கணை குளிப்பத் தன் தொழில் முடியான் அவிதலும் மூதானந்தம்.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | ஆனந்தம் |  | 264. | ஆடமைத் தோளி, விரிச்சியும் சொகினமும் வேறுபட அஞ்சி விதுப்புற்றன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இதுவுமது |  | 265. | தவப் பெரிய வெஞ்சமம் குறுகும் அவற்கு இரங்கினும் அத்துறை ஆகும்.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | ஆனந்தப் பையுள் |  | 266. | விழுமம் கூர, வேய்த்தோள் அரிவை கொழுநன் வீயக் குழைந்து உயங்கின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கையறு நிலை |  | 267. | செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர் கையற உரைத்துக் கை சோர்ந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இதுவுமது |  | 268. | கழிந்தோன் தன் புகழ் காதலித்து உரைப்பினும் மொழிந்தனர் புலவர் அத் துறை என்ப.
 | 
 | உரை | 
		
			|  |  |  |