முல்லைப் பொது இயல்
 
முல்லைப் பொது இயல்
சீர்சால் முல்லையொடு , கார்முல்லை என்றா,
தேர்முல்லையொடு , நாள்முல்லை என்றா,
இல்ஆண் முல்லையொடு , பகட்டு முல்லை என்றா,
பால் முல்லையொடு , கற்பு முல்லை என்று ஆங்கு
இரு - நால் முல்லையும் பொது இயல் பால்.
உரை
   
முல்லை
275. தட வரை மார்பன் தன் அமர் காதல்
மடவரல் புணர்ந்த மகிழ்ச்சிநிலை உரைத்தன்று.
உரை
   
கார் முல்லை
276. அருந்திறல் கட்டூர் அவர் வாரா முன்
கருங்கடல் முகந்து கார் வந்தன்று.
உரை
   
தேர் முல்லை
277. உருத்து எழும் மன்னர் ஒன்னார் தம்நிலை
திருத்திய காதலர் தேர் வரவு உரைத்தன்று.
உரை
   
நாண் முல்லை
278. செறுநர் நாணச் சேயிழை அரிவை
வறுமனை வைகித் தற்காத்தன்று
உரை
   
இல்லாள் முல்லை
279. கழுமிய காதல் கணவனைப் பழிச்சி
இழும் என் சீர்த்தி இல் மலிபு உரைத்தன்று.
உரை
   
பகட்டு முல்லை
280. வயல் மிகு சிறப்பின் வருத்தமும் நோன்மையும்
வியல் மனைக் கிழவனைப் பகட்டொடு பொரீஇயன்று.
உரை
   
பால் முல்லை
281. அரிபாய் உண்கண் ஆயிழைப் புணர்ந்தோன்
பரிவு அகல் உள்ளமொடு பால் வாழ்த்தின்று.
உரை
   
கற்பு முல்லை
282. பொன் திகழ் சுணங்கின் பூங்கண் அரிவை
நன்று அறி கொழுநனை நலம் மிகுத்தன்று.
உரை
   
இதுவுமது
283. மேவரும் கணவன் தணப்பத் தன்வயின்
காவல் கூறினும் அத் துறை ஆகும்.
உரை
   
இதுவுமது
284. திருவளர் நல் நகர் அடைந்த கொழுநன்
பெருவளம் ஏத்தினும் அத் துறை ஆகும்.
உரை