| தொடக்கம் | 
		
				| ஆண்பால் கூற்று 
 | 
		
				|  | 
					
			
			|  | |  | 11. கைக்கிளைப் படலம் ஆண்பால் கூற்று
 |  |  | காட்சி , ஐயம் , துணிவே, உட்கோள், பயந்தோர்ப் பழிச்சல் , நலம் பாராட்டல்,
 நயப்பு உற்று இரங்கல் , புணரா இரக்கம் ,
 வெளிப்பட இரத்தல் ,என இவ் ஒன்பதும்
 ஆண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | காட்சி |  | 285. | சுரும்பு இவர் பூம்பொழில் சுடர்வேல் காளை கருந்தடங் கண்ணியைக் கண்டு நயந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | ஐயம் |  | 286. | கல் நவில் தோளான் கண்டபின் அவளை இன்னள் என்று உணரான் ஐயம் உற்றன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | துணிவு |  | 287. | மாநிலத்து இயலும் மாதர் ஆம் எனத் தூமலர்க் கோதையைத் துணிந்து உரைத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | உட்கோள் |  | 288. | இணர் ஆர் கோதை என் நெஞ்சத்து இருந்தும் உணராள் என்னை என உட்கொண்டன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பயந்தோர்ப் பழிச்சல் |  | 289. | இவள் பயந்து எடுத்தோர் வாழியர் நெடிது என, அவள் பயந்தோரை ஆனாது புகழ்ந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | நலம் பாராட்டல் |  | 290. | அழி படர் எவ்வம் கூர , ஆயிழை பழி தீர்நல் நலம் பாராட்டின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | நயப்புஉற்று இரங்கல் |  | 291. | கொய் தழை அல்குல் கூட்டம் வேண்டி எய்துதல் அருமையின் இறப்பப் புகழ்ந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | புணரா இரக்கம் |  | 292. | உணரா எவ்வம் பெருக ஒளியிழைப் புணரா இரக்கமொடு புலம்பு தர வைகின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வெளிப்பட இரத்தல் |  | 293. | அந்தழை அல்குல் அணி நலம் புணரா வெந்துயர் பெருக வெளிப்பட இரந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  |