| தொடக்கம் | 
		
				| பெண்பால் கூற்று 
 | 
		
				|  | 
					
			
			|  | |  | 12. பெருந்திணைப் படலம் பெண்பால் கூற்று
 |  |  | வேட்கை முந்து உறுத்தல் , பின் நிலை முயறல், பிரிவிடை ஆற்றல் , வரவு எதிர்ந்து இருத்தல்,
 வாராமைக்கு அழிதல் , இரவுத்தலைச் சேறல்,
 இல்லவை நகுதல் , புலவியுள் புலம்பல்,
 பொழுது கண்டு இரங்கல் , பரத்தையை ஏசல்,
 கண்டு கண் சிவத்தல் , காதலில் களித்தல்,
 கொண்டு அகம் புகுதல் , கூட்டத்துக் குழைதல்,
 ஊடலுள் நெகிழ்தல் , உரை கேட்டு நயத்தல்,
 பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல்,
 பள்ளிமிசைத் தொடர்தல் , செல்க என விடுத்தல், என
 ஒன்பதிற்று இரட்டியோடு ஒன்றும் உளப்படப்
 பெண்பால் கூற்றுப் பெருந்திணைப் பால.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வேட்கை முந்து உறுத்தல் |  | 306. | கைஒளிர் வேலவன் கடவக் காமம் மொய் வளைத் தோளி முந்துற மொழிந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பின் நிலை முயறல் |  | 307. | முன் இழந்த நலன் நசைஇப் பின் நிலை மலைந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பிரிவிடை ஆற்றல் |  | 308. | இறை வளை நெகிழ இன்னாது இரங்கிப் பிறைநுதல் மடந்தை பிரிவிடை ஆற்றின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வரவு எதிர்ந்து இருத்தல் |  | 309. | முகை புரை முறுவல் முள் எயிற்று அரிவை வகை புனை வள மனை வரவு எதிர்ந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | வாராமைக்கு அழிதல் |  | 310. | நெடுவேய்த் தோளி நிமித்தம் வேறுபட வடிவேல் அண்ணல் வாராமைக்கு அழிந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இரவுத் தலைச் சேறல் |  | 311. | காண்டல் வேட்கையொடு கனை யிருள் நடுநாள் மாண்ட சாயல் மனை இறந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | இல்லவை நகுதல் |  | 312. | இல்லவை சொல்லி இலங்கு எயிற்று அரிவை நல் வயல் ஊரனை நகை மிகுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | புலவியுள் புலம்பல் |  | 313. | நல வளை மடந்தை நல் தார் பரிந்து புலவி ஆற்றாள் புலம்புற்றன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பொழுது கண்டு இரங்கல் |  | 314. | நிற்றல் ஆற்றாள் நெடிது உயிர்த்து அலமரும் பொன்தொடி அரிவை பொழுது கண்டு இரங்கின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பரத்தையை ஏசல் |  | 315. | அணி வயல் ஊரனொடு அப்பு விழவு அமரும் பணிமொழி அரிவை பரத்தையை ஏசின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கண்டு கண் சிவத்தல் |  | 316. | உறு வரை மார்பன் ஒள் இணர் நறுந்தார் கறுவொடு மயங்கிக் கண் சிவந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | காதலில் களித்தல் |  | 317. | மைவரை நாடன் மார்பகம் பொருந்திக் கைவிடல் அறியாக் காதலில் களித்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கொண்டு அகம் புகுதல் |  | 318. | காதல் பெருகக் கணவனைக் கண்ணுற்றுக் கோதையால் பிணித்துக் கொண்டு அகம் புக்கன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | கூட்டத்துக் குழைதல் |  | 319. | பெய் தார் அகலம் பிரிதல் ஆற்றாக் கொய் தழை அல்குல் கூட்டத்துக் குழைந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | ஊடலுள் நெகிழ்தல் |  | 320. | நள்ளிருள் மாலை நடுங்கு அஞர் நலிய ஒள் வளைத் தோளி ஊடலுள் நெகிழ்ந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | உரை கேட்டு நயத்தல் |  | 321. | துயரொடு வைகிய சூழ்வளைத் தோளி உயர் வரை நாடன் உரை கேட்டு நயந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல் |  | 322. | கோடு உயர் வெற்பன் கூப்பிய கையொடு பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கின்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | பள்ளிமிசைத் தொடர்தல் |  | 323. | மா இருங் கங்குல் மாமலை நாடனைப் பாயல் நீவிப் பள்ளிமிசைத் தொடர்ந்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | |  | செல்க என விடுத்தல் |  | 324. | பா இருள் கணவனைப் படர்ச்சி நோக்கிச் சேயிழை அரிவை செல்க என விடுத்தன்று.
 | 
 | உரை | 
		
			|  |  |  |