இ - ள்:
ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்று சொல்லப்பட்ட
ஐந்து பாலினும், உயர்திணை:
ஒருவன், ஒருத்தி, பலர் என மூன்று பாற்படும்;
அஃறிணை: ஒன்று பல என இரண்டு பாற்படும்
எ-று.
இவ்வாறு பால் விளங்கி நிற்பன படர்க்கைக்கண் என்றவாறு. என்னை?
ஒருவன் ஒருத்தி பலரென்று மூன்றே
உயர்திணை மருங்கிற் படர்க்கைப் பாலே
யொன்றன் படர்க்கை பலவற்றுப் படர்க்கை
யன்றி யனைத்தும் அஃறிணைப் பால.
என்றார் அவிநயனார்.
ஒரு சாராசிரியர் இருதிணை ஐம்பாலைச் சொல்லுமாறு:
உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை யென்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே.
(தொல்.கிளவி. சூ. 1)
ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல்
பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி
யம்முப் பாற்சொல் லுயர்திணை யவ்வே. 2
ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்
றாயிரு பாற்சொ லஃறிணை யவ்வே
3
பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியுந்
தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென வறியு மந்தந் தமக்கிலவே
வுயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்.
4
என்றாராகலின்.
(4)
ஐம்பால்களின் இறுதி நிலைகள்
5. அன்ஆனும் அள்ஆளும் அர்ஆர்பவ் வீறுமாம்
முன்னை உயர்திணைப்பான் மூன்றற்கும் - தன்வினைகொண்டு
ஆய்ந்த துறுடுவும் அஆவவ் வீறுமாம்
ஏய்ந்த அஃறிணைப்பாற் கீங்கு.
|