திசைச்சொல், இடைத்திசைச்சொல், உரித்திசைச்சொல் எனவும்;
பெயர்வடசொல் வினைவடசொல், இடைவடசொல், உரிவடசொல் எனவும்
வரும். இவற்றுட் பெயர்ச்சொல் உயர்திணைப்பெயர், அஃறிணைப்பெயர்,
விரவுப்பெயர் என மூன்று கூறாம் எ-று.
என்னை?
இயற்சொற்
றிரிசொற் றிசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே
|
(தொல். எச். 1)
|
அவற்றுள்
இயற்சொற் றாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்லே |
(தொல். எச். 2)
|
ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும்
வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியும்
இருபாற் றென்ப திரிசொற் கிளவி.
|
(தொல். எச். 3)
|
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந்
தங்குறிப் பினவே திசைசொற் கிளவி
|
(தொல். எச். 4)
|
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
|
(தொல். எச். 5)
|
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்
|
(தொல். எச். 6) |
என்பனவற்றான் இயற்சொன் முதல் நான்கும் ஆமாறு உணர்ந்து கொள்க.
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையும்
அம்மூ வுருபின தோன்ற லாறே
(தொல். பெய. 6)
என்பவாகலின்.
|