பெருங்காப்பியம்
 
8. அவற்றுள்,
பெருங்காப்பிய நிலை பேசும் காலை ,
வாழ்த்து , வணக்கம் , வருபொருள் , இவற்றின் ஒன்று
ஏற்பு உடைத்து ஆகி, முன்வரவு இயன்று ,
நால்பொருள் பயக்கும் நடைநெறித்து ஆகித்.
தன் நிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய்,
மலை , கடல் , நாடு , வளநகர் , பருவம் ,
இரு சுடர்த் தோற்றம் , என்று இனையன புனைந்து ,
நல் மணம் புணர்தல் , பொன்முடி கவித்தல் ,
பூம்பொழில் நுகர்தல் , புனல் விளையாடல்,
தேன் பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் ,
புலவியில் புலத்தல் , கலவியில் களித்தல் , என்று
இன்னன புனைந்த நல் நடைத்து ஆகி ,
மந்திரம் , தூது , செலவு , இகல் , வென்றி ,
சந்தியில் தொடர்ந்து , சருக்கம் , இலம்பகம் ,
பரிச்சேதம் , என்னும் பான்மையின் விளங்கி,
நெருங்கிய சுவையும் , பாவமும் , விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றியது என்ப .
உரை