தொடக்கம் | ||
உருவக அணி
|
||
36. | உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து, ஒன்று என மாட்டின் அஃது உருவகம் ஆகும். |
உரை |
37. | தொகையே , விரியே , தொகைவிரி , எனாஅ; இயைபே , இயைபுஇலி ,வியனிலை , எனாஅச் சிறப்பே , விரூபகம் , சமாதானம் , எனாஅ ; உருவகம் , ஏகம் , அநேகாங்கம் எனாஅ ; முற்றே , அவயவம் , அவயவி, எனாஇச் சொற்ற ஐம்- மூன்றும் மற்று அதன் விரியே. |
உரை |
38. | உவமை , ஏது , வேற்றுமை, விலக்கே , அவநுதி , சிலேடை என்று அவற்றொடும் வருமே. |
உரை |
39. | உருவகம் , உவமை ,என இரு திறத்தவும் நிரம்ப உணர்த்தும் வரம்பு தமக்கு இன்மையின் . கூறிய நெறியின் வேறுபட வருபவை , தேறினர் கோடல் தெள்ளியோர் கடனே. |
உரை |