மூலம்
எழுத்தியல்
முதனிலை
பொதுவிதியுட் சிறப்புவிதி
105
அ ஆ எ ஒவ்வோ டாகு ஞம்முதல்.
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
அ, ஆ, எ ஒவ்வோடு - அ, ஆ, எ, ஒ என்னும் நான்கு உயிரோடும் , ஞ முதல் ஆகும்-ஞகர மெய் (சொல்லுக்கு) முதலாகும் .
ஞமலி , ஞாலம் , ஞெகிழி , ஞொள்கிற்று என வரும் .