உயிரீற்றுப் புணரியல்

முற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

 
180அதுமுன் வருமன் றான்றாந் தூக்கின்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அது முன் வரும் அன்று - அது என்னும் சுட்டுப்பெயர் முன் வரும் அன்று என்னும் வினைக் குறிப்பு முற்று , தூக்கின் ஆன்று ஆம் - பாட்டினிடத்து முதல் நீளும்.

அது + அன்று = அதான்று என வரும்.
ஆன்றேயாம் என இயல்பை விலக்காமையால், அதுவன்று , அதன்று எனவும் வரும்.

அன்றான்றாம் என்றது எய்தாதது எய்துவித்தல்.