உருபு புணரியல்

உருபு புணர்ச்சிக்குச சிறப்புவிதி

 
252அத்தி னகர மகரமுனை யில்லை .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அத்தின் அகரம் - அத்துச் சாரியையினது அகர உயிர் , அகர முனை இல்லை - இயல்பினும் விதியினும் நின்ற அகர உயிர் ஈற்றின் முன் வரின் வகர வுடம்படுமெய் பெறாது கெடும் .

மக + அத்து + கை = மகத்துக்கை , மர + அத்து + குறை = மரத்துக்குறை என இரண்டு அகர ஈற்றின் முன்னும் கெட்டது .