வினையியல்

முற்றுவினை
பலர்பால் படர்க்கை வினைமுற்று

 
327அர் ஆர் பவ்வூ ரகரமா ரீற்ற
பல்லோர் படர்க்கைமார் வினையொடு முடிமே
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அர் ஆர் பவ்வூர் அகரம் மார் ஈற்ற = அர் ஆர் ப மார் என்னும் நான்கு விகுதிகளையும் இறுதியின் உடைய மொழிகள், பல்லோர் படர்க்கை = உயர்திணைப் பலர்பால் படர்க்கை வினைமுற்றும் குறிப்பு முற்றுமாம் , மார் வினையொடும் முடியும் = இவற்றுள் மார் ஈற்று வினைமுற்றுப் பொது விதியால் பெயருடன் முடிவது அன்றி வினையுடனும் முடியும்.

" மாரெதிர்வும் பாந்தஞ் செலவொடு வரவும் " எனப் பதவியலுள் கூறினமையால் , இவ்விரு விகுதியும் குறிப்பு முற்றிலே வாரா என்க.
இ. தெரி.நி. தெரி.எ. தெரி.குறி.
நடந்தனர்நடக்கின்றனர்நடப்பர்குழையர்} அவர்
நடந்தார்நடக்கின்றார்நடப்பார்குழையார்

நடப்ப , எய்துப , மொழிப , அவர் எனப் பவ்விகுதி வரும்.

" பெரிய வோதினுஞ் சிறிய வுணராப் - பீடின்று பெருகிய திருவிற் - பாடின் மன்னரைப் பாடன்மா ரெமரே " என மார் ஈற்று வினைமுற்றுப் பெயருடன் முடிந்தது. பாடன்மார் என்பது பாடுவார் அல்லர் எனப்பொருள்படும்; 'அல்' எதிர்மறை இடைநிலை.

" ஆர்த்தார் கொண்மார் வந்தார் " என மார் ஈற்று வினைமுற்று வினையொடு முடிந்தது. கொண் மார் என்பது கொள்வார் எனப்பொருள்படும்.

8