வினையியல்

முற்றுவினை
தன்மைப் பன்மை வினைமுற்று

 
332அம்மா மென்பன முன்னிலை யாரையும்
எம்மே மோமிவை படர்க்கை யாரையும்
உம்மூர் கடதற விருபா லாரையுந்
தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தன்னிலையின் நிற்பதன்றி , அம் ஆம் என்பன முன்னிலையாரையும் = அம் , ஆம் என்னும் இவ்விரு விகுதிகளையும் இறுதியில் உடைய மொழிகள் முன்னிலை இடத்தாரையும் , எம் ஏம் ஓம் இவை படர்க்கையாரையும் = எம் , ஏம் , ஓம் என்னும் இம்மூன்று விகுதிகளையும் இறுதியில் உடைய மொழிகள் படர்க்கை இடத்தாரையும், உம் ஊர் கடதற இருபாலாரையும் = கும் , டும் , தும் , றும் என்னும் இந்நான்கு விகுதிகளையும் இறுதியில் உடைய மொழிகள் முன்னிலை படர்க்கை என்னும் ஈர் இடத்தார்களையும் , தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மை = தன்னுடன் கூட்டும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்றும் குறிப்பு முற்றுமாம்.

கும் , டும் , தும் , றும் என்னும் நான்கும் தாமே காலம் காட்டுதலால் குறிப்புவினைக்கு வாரா.
இ.தெரி.நி.தெரி.எ.தெரி.குறி.
உண்டனம்உண்கின்றனம்உண்பம்தாரினம்} யாம் யானுநீயும்
உண்டாம்உண்கின்றாம்உண்பாம்தாரினாம்
உண்டனெம்உண்கின்றனெம்உண்பெம்தாரினெம்} யாம் யானுமவனும்.
உண்டேம்உண்கிறேம்உண்பேம்தாரினேம்
உண்டோம்உண்கின்றோம்உண்போம்தாரினோம்

இ.தெரி.எ.தெரி.
----------உண்கும்} யாம் யானுநீயுமவனும்
உண்டும்----------
வந்தும்வருதும்
சென்றும்சேறும்

இவை சிறுபான்மை இம்முறை இன்றி மயங்கி வருதலும் உண்டு. மற்றவைகளும் இப்படியே வரும்.

13