அசைநிலை = அசைநிலைக்கும் , பொருணிலை = விரைவு, வெகுளி, உவகை, அச்சம் , அவலம் முதலிய பொருள் நிலைக்கும் , இசை நிறைக்கு = இசைநிறைக்கும் , ஒருசொல் இரண்டு மூன்று நான்கு எல்லை முறை அடுக்கும் = ஒரு மொழி இரண்டு மூன்று நான்கு அளவு முறையே அடுக்கும். எனவே, அசைநிலைக்கு இரண்டும் , பொருள்லைக்கு இரண்டும் மூன்றும் , இசைநிறைக்கு இரண்டும் மூன்றும் நான்கும் அடுக்கும் என்பதாயிற்று. 1. அன்றே அன்றே.................அசைநிலை 2. உண்டேன் உண்டேன் , போ போ போ...........விரைவு. 3. எய் எய் , ஏறி யெறி யெறி.......................வெகுளி. 4. வருக வருக , பொலிக பொலிக பொலிக....உவகை. 5. பாம்பு பாம்பு ; தீத்தீத்தீ .............................அச்சம் 6 . உய்யேன் உய்யேன் ; வாழேன் வாழேன் வாழேன் ..............அவலம் . 7 . ஏயே யம் பன் மொழிந்தனள் யாயே நல்குமே நல்குமே நல்குமே நாமகள் பாடுகோ பாடுகோபாடுகோ | ....இசைநிறை . |
ஒருசொல்லைப் பலகாற் சொல்லுதல் வழுவாயினும் இவ்விடத்தே ஆம் என்றல் வழுவமைதியும் , இதற்கு இவ் எல்லை கடவாது என்றல் வழுவாமல் காத்தலுமாம். 44
|