பொதுப்பாயிரம்

நூலினது வரலாறு
முதனூல் இன்ன தென்பது

 
6அவற்றுள் ,
*வினையி னீங்கி விளங்கிய வறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அவற்றுள் - அம் மூவகைநூலுள் , வினையின் நீங்கி விளங்கிய அறிவின் - இயல்பாகவே வினையினின்று நீங்கித் தானே விளங்கிய அறிவினையுடைய , முனைவன் கண்டது முதனூல் ஆகும் - கடவுள் உயிர்களுக்கு ஆதி காலத்திலே செய்தது முதல் நூலாம் .

* தொல்காப்பியம் பொருள் அதிகாரம் மரபியல்.94 .