எழுத்தியல்

பிறப்பு
முதல் எழுத்துக்களுக்கு இடப்பிறப்பு

 
75அவ்வழி,
ஆவி யிடைமை யிடமிட றாகும்
மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அவ்வழி - முன் சொன்ன வழியால் பிறக்கும் இடத்து. ஆவி இடைமை இடம் மிடறு ஆகும் - உயிரெழுத்துக்களுக்கும் இடையினத்திற்கும் இடம் கழுத்தாகும் , மென்மை மூக்கு மேவும் - மெல்லினம் நாசியை இடமாகப் பொருந்தும் , வன்மை உரம் பெறும் - வல்லினம் மார்பை இடமாகப் பெறும் .