எழுத்தியல்

பிறப்பு
முதல் எழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு

 
84அண்பன் முதலு மண்ணமு முறையின்
நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும்
லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அண்பல் முதல் நா விளிம்பு வீங்கி ஒற்ற , லகாரம் ( ஆய் ) - மேல்வாய்ப் பல்லடியை நா ஓரமானது தடித்து நெருங்க லகாரமாகியும் , அண்ணம் (நா விளிம்பு) வீங்கி வருட ளகாரம் ஆய் - மேல்வாயை நா ஓரமானது தடித்துத் தடவ ளகாரமாகியும் , இரண்டும் முறை பிறக்கும் - இரண்டு எழுத்துக்களும் இம்முறையே பிறக்கும் .