உயிரீற்றுப் புணரியல்

பொதுப் புணர்ச்சி

முன்னிலைவினை ஏவல்வினை முன் வல்லினம்

 
161ஆவி யரழ விறுதிமுன் னிலைவினை
ஏவன்முன் வல்லின மியல்பொடு விகற்பே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆவி ய ர ழ இறுதி முன்னிலை வினை ஏவல் முன் - உயிரையும் ய , ர , ழ என்னும் மூன்று மெய்களையும் இறுதியாக உடைய முன்னிலை வினை முன்னும் , ஏவல் வினை முன்னும் , வல்லினம் இயல்பொடு விகற்பு - வரும் க , ச , த , பக்கள் இயல்புடனே விகற்பமாம் .

முன்னிலைவினை என்றது , தன்மைவினை படர்க்கை வினைகளுக்கு இனமாய் , முன் நின்றான் தொழிலையுணர்த்தும் வினையை ஏவல்வினை யென்றது , இன மின்றி முன்னிலை ஒன்றற்கே உரியதாய் , முன்நின்றானைத் தொழிற்படுத்தும் வினையை .

விகற்பமாவது , ஒருகால் இயல்பாயும் ஒருகால் விகாரமாயும் புணர்வது . விகற்பம் , உறழ்ச்சி என்பன ஒரு பொருள் சொற்கள் .

1 . உண்டி , உண்டனை , உண்டாய் எனவும்
உண்டனிர் , உண்டீர் எனவும் , நிறுத்தி ,
சாத்தா , கொற்றா , தேவா , பூதா எனவும் ,
சாத்தரே , கொற்றரே , தேவரே , பூதரே
எனவும் வருவித்து ,
உண்டி சாத்தா , உண்டனிர் சாத்தரே
எனக் கூட்டி , ஆவி , ய , ர இறுதி முன்னிலை வினை முன் இயல் பாதல் காண்க .

ழகர மெய் முன்னிலைவினைக்கு ஈறாகாது , முன்னிலை வினைமுன் விகற்பம் வந்த வழிக் காண்க .

2. கொணா , எறி , விடு , ஆய் , சேர் , தாழ் என நிறுத்தி , சாத்தா , கொற்றா , தேவா , பூதா என வருவித்து , கொணா சாத்தா என முறையே கூட்டி , ஆவி , ய , ர , ழ இறுதி ஏவல்வினைமுன் இயல்பாதல் காண்க .

நட கொற்றா , நடக் கொற்றா , எய் கொற்றா , எய்க் கொற்றா என ஏவல்வினை முன் விகற்பித்தல் காண்க .