ஆண் பெண் பலர் என முப்பாற்று உயர்திணை - ஆண்பாலும் பெண்பாலும் பலர்பாலும் என்று மூன்று பாலினை உடைத்தாகும் உயர்திணை. ஆடவர், ' காளையர் முதலிய ஆண்பன்மையையும், பெண்டிர், மங்கையர் முதலிய பெண்பன்மையையும், மக்கள் அவர் முதலிய அவ்விருவர் பன்மையையும் அடக்கிப் பலர்பால் என்றார் . பின் பலவின்பால் என்பதும் அது.
|