பொதுப்பாயிரம்

பாடங் கேட்டலின் வரலாறு

 
44*ஆசா னுரைத்த தமைவரக் கொளினும்
காற்கூ றல்லது பற்றல னாகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்- ஆசிரியன் கற்பித்த பொருளைத் தன் அறிவினிடத்து நிறையக் கற்றான் ஆயினும் , காற் கூறு அல்லது பற்றலன் ஆகும் - புலமைத் திறத்தில் கால் பங்கு அல்லது அதற்கு அதிகமாகப் பெறாதவன் ஆவன் .

(அ.கு)*தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை மேற்கோள் .