சிறப்புப்பாயிரம்

பாயிரம் நூலுக்கு இன்றி அமையாச் சிறப்பினது என்பது

 
54ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் - ஆயிரம் உறுப்புக்களால் விரிந்தது ஆயினும் , பாயிரம் இல்லது பனுவல் அன்று - பாயிரம் இல்லாதது நூல் அன்றாம்.