சிறப்புப்பாயிரம்

சிறப்புப்பாயிரத்துக்குப் பொதுவிதி

 
48*காலங் களனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
காலம் - நூல் செய்த காலமும் , களன் - நூல் அரங்கேற்றிய சபையும் , காரணம் - நூல் செய்தற்குக் காரணமும் , என்று இம் மூவகை ஏற்றி மொழிநரும் உளர் - என்று இம் மூன்றனையும் அவ் எட்டனோடு கூட்டிப் பதினொன்றாகச் சொல்லுவாரும் சிலர் உளர் .

(அ.கு) *இறையனார் அகப்பொருள் உரை மேற்கோள் .