வினையியல்

முற்றுவினை
தன்மை ஒருமை வினைமுற்று

 
331கு டு து று வென்னுங் குன்றிய லுகரமோ
டல்லன் னென்னே னாகு மீற்ற
இறுதினை முக்கூற் றொருமைத் தன்மை .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
குடுதுறு என்னும் குன்றியலுகரமோடு = குடுதுறு என்னும் குற்றியலுகர விகுதிகளும் , அல் அன் என்ஏன் ஆகும் - அல் , அன் , என் , ஏன் என்னும் நான்கு மெய் ஈற்று விகுதிகளும் ஆகிய , ஈற்ற = இவ் எட்டு விகுதிகளையும் இறுதியிலே உடைய மொழிகள் , இருதிணை முக்கூற்று ஒருமைத் தன்மை = இருதிணை இடத்தன ஆகிய ஒருவன் , ஒருத்தி , ஒன்று என்னும் மூன்று பால்களுக்கும் பொதுவாகிய ஒருமைத்தன்மை வினைமுற்றும் குறிப்பு முற்றுமாம்.

கு , டு , து , று என்னும் நான்கும் தாமே காலங்காட்டுதலால் குறிப்புவினைக்கு வாரா. அல் விகுதி எதிர் கால இடைநிலைகளோடு மாத்திரம் வரும்.
இ. தெரி.எ.தெரி.
-----------உண்கு} யான்.
உண்டு----------
வந்துவருது
சென்றுசேறு
--------உண்பல்

இ.தெரி.நி.தெரி.எ.தெரி.குறி.
உண்டனன்உண்ணாநின்றனன்உண்பன்தாரினன்} யான்.
உண்டனென்உண்ணாநின்றனென்உண்பென்தாரினென்
உண்டேன்உண்ணாநின்றேன்உண்பேன்தாரினேன்

மற்றவைகளும் இப்படியே வரும்.

12