மூலம்
எழுத்தியல்
இடைநிலை மயக்கம்
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்குச் சிறப்பு விதி
111
ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே.
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
ஙம் முன் க வம் முன் ய ஆம் - ஙகரத்தின் முன் ககரமும்; வகரத்தின் முன் யகரமும் மயங்கும் .
கங்கன் எனவும் ,
தெவ் யாது எனவும் வரும்.