உயிரீற்றுப் புணரியல்
 
169சாவவென் மொழியீற் றுயிர்மெய்சா தலும்விதி .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
சாவ என் மொழி ஈற்று உயிர் மெய் சாதலும் விதி-சாவ என்னும் செய என் எச்சவினைச் சொல்லினுடைய இறுதியில் உள்ள வகர உயிர்மெய் கெட்டுப் புணர்தலும் விதியாகும் .

சாவ+குத்தினான் - சாக் குத்தினான் எனவரும் .இப்புணர்ச்சி சாவக் குத்தினான் என்னும் புணர்ச்சி போல் சிறந்தது அல்லாமையால் சாதலும் விதி என்றார் .

இது நிலைமொழிக்கு எய்தாதது எய்துவித்தல்.