சினைவினை = முதல் நான்கும் ஈற்றில் மூன்றும் என்ற வினைஎச்சங்கள் சினைவினையாயின் அவை, சினையொடும் = முன் வினைமுதல் கொள்ளும் என்ற விதியினாலே சினையுடனே அன்றி, முதலொடும் செறியும் - ஒற்றுமைப்பற்றி முதலுடனும் முடியும். காலொடிந்து விழுந்தான்,கண் வருவான் கதிரவனைத் தொழுதான் என வரும். பிறவும் அன்ன. ஒடிதல் சினைவினை, விழுதல் முதல் வினை. 26
|